பறக்கும் தட்டு உண்மையா?

பறக்கும் தட்டு உண்மையா?, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 200ரூ.

மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் இப்போது வரை கிடைக்காமல் இருக்கும் கேள்வி, வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா, அவர்கள் பறக்கும் தட்டு மூலம் நமது உலகுக்கு வந்து செல்கிறார்களா என்பதுதான்.

உலகின் பல பகுதிகளிலும் பறக்கும் தட்டுக்களைப் பார்த்தவர்கள் கூறிய ஆச்சரியமான தகவல்கள், அவற்றுக்கு விஞ்ஞானிகள் கூறும் விளக்கங்கள் ஆகியவற்றையும், வேற்றுக் கிரகவாசிகள் பற்றி அமெரிக்காவில் ரகசியமாக ஆய்வு நடத்தப்படுவதாகக் கூறப்படும் ‘ஏரியா 51’ என்ற இடம் பற்றிய தகவல்களையும், சுவாரசியமாக தந்து இருக்கிறார், ஆசிரியர்.

இந்தியாவில் குஜராத் அருகே கடலில் மூழ்கி இருப்பதாகக் கூறப்படும் துவாரகா நகரம், வேற்றுக் கிரகவாசிகளின் வான்வெளித் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம் என்பது போன்ற வியக்கத்தக்க செய்திகளும், பறக்கும் தட்டுகள் தொடர்பான அபூர்வமான படங்களும் இதில் தரப்பட்டுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *