செயின்ட் ஜார்ஜ் கோட்டை

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 175ரூ.

சென்னை மாநகரின் முக்கிய அடையாளம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1640ம் ஆண்டு, வர்த்தக நோக்கில் இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் பாதுகாப்புக்காக கட்டிய கோட்டை இது.இன்று, தமிழக அரசு நிர்வாகம் செய்யும் முக்கிய கோட்டையாகவும் விளங்குகிறது. 

அத்துடன், இந்திய ராணுவக் குடியிருப்பு மற்றும் இந்திய கடற்படை ஆகியவையும் இங்கு தான் அமைந்துள்ளன. பிரஞ்சுப் படையினர் இரு முறை ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டு, இக்கோட்டையைக் கைப்பற்றிய வரலாறும் இருக்கிறது!

நானுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோட்டை கட்டப்பட்டது முதல், இன்று வரையிலான வரலாற்றை ஏராளமான ஆவணங்களை நுணுகி ஆராய்ந்து சுவைபட எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

– மயிலை சிவா

நன்றி: தினமலர், 15/10/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *