வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்., முனைவர் க.பன்னீர்செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், விலை 190ரூ.

ஒரு துணை நடிகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர். கடும் உழைப்பினால் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் ‘வசூல் மன்னன்’ ஆனால். கலைஞருடன் ஏற்பட்ட மோதலால் தி.மு.க. வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை தொடங்கி, ஆட்சியைக் கைப்பற்றினார்.

10 ஆண்டுகள் தமிழக முதல்- அமைச்சராக பதவி வகித்து, புகழின் உச்சியில் இருக்கும்போதே மறைந்தார். இது ஒரு புறம் இருக்க, துப்பாக்கியால் சுடப்பட்டு, யமனுடன் போராடி வெற்றி பெற்றார்.

ஏழை எளிய மக்களுக்கு உதவி, “வள்ளல்” என்ற பெயரை பெற்றார். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை உண்மையில் ஒரு சரித்திரம். அதை அருமையாக இனிய நடையில் எழுதி இருக்கிறார் முனைவர் க.பன்னீர்செல்வம். படிக்க வேண்டிய புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *