வேளாண் காதலர் வெங்கடபதி
வேளாண் காதலர் வெங்கடபதி, ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.152, விலை ரூ.120.
கல்வியறிவில்லாத ஒருவர் விவசாயிகளுக்கான முதல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது. புதுச்சேரிக்கு அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதிதான் அந்த விவசாயி.
கல்வியறிவில்லாத அவர் இளமைக்காலத்தில் வாழ்வில் முன்னேறக் கூடிய எந்தவித அறிகுறிகளும் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். பின்னர் கனகாம்பர செடி வளர்ப்பதில் அவருக்கு ஆர்வம் வந்திருக்கிறது.
புதுவிதமான கனகாம்பர நாற்றுகளைப் பதியம் போட்டு வளர்த்திருக்கிறார். வேளாண்துறையிலிருந்து ஒரு லட்சம் கனகாம்பர நாற்றுகளுக்கான ஆர்டர் கிடைத்ததும், கிளைப்பதியம், கணுப்பதியம் முறைகளில் கனகாம்பர நாற்றுகளை உருவாக்கியிருக்கிறார்.
கனகாம்பரச் செடிக்குத் தேவையான தட்பவெப்பத்தை உருவாக்க மிஸ்ட் சேம்பர் அமைத்திருக்கிறார். திசு வளர்ப்பு முறையில் கனகாம்பரச் செடியை லட்சக்கணக்கில் உருவாக்கி வேளாண்துறைக்குக் கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, பலவிதமான வண்ணங்களில் பூக்கும் கனகாம்பரச் செடிகளை உருவாக்க காமாகதிர் வீச்சு முறைகளைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
ஐந்து பேர் உண்ணும் உணவுக்கு ஒரு மிளகாய் போதும் என்று புதிய வகை நெய் மிளகாயை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
ஓங்கி வளரும் சவுக்கு மரத்தை உருவாக்கியிருக்கிறார். இவ்வாறு அவர் செய்த சாதனைகள்அனைத்தும் இந்நூலில் மிக சுவாரசியமாக விளக்கப்பட்டிருக்கின்றன. எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான உறுதியான, சரியான உழைப்பும் இருந்தால் சிகரத்தைத் தொட முடியும் என்பதை வெங்கடபதியின் வாழ்க்கை மூலமாக இந்நூல் உணர்த்துகிறது.
நன்றி: தினமணி,2/7/2018
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027044.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818