பண்டைய தமிழர் பண்பாடு

பண்டைய தமிழர் பண்பாடு, பாலசுந்தரம் இளையதம்பி, மணிமேகலைப் பிரசுரம், விலை 220ரூ.

பண்டைய தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு எனும் இந்நுால், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பியால் எழுதப் பெற்றது. இது, பெயருக்கேற்ப பண்டைய காலத் தமிழர்களின் வரலாற்றை மீள்கட்டமைப்பு செய்யும் வகையில் இந்நுாலாசிரியரின் ஆய்வுப் பார்வை தெளிவாக உள்ளது.

பண்டைய தமிழர்கள் வாழ்ந்த நாட்டிற்கு நாவலந்தீவு நிலம் எப்பெயரால் வழங்கப்பட்டு வந்தது என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் அவர், பிற்பாடு அப்பெயர் மருவியதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை விரிவாக விளக்கிச் செல்லும் பாங்கு அருமை.

மேலும், பண்டைய தமிழர் நிலம் குட்டுவர் நாடென்றும், சோழ நாடென்றும், பாண்டிய நாடென்றும் வழங்கப்பட்டு வந்ததை விளக்கும் அவர், அன்றைய தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைப்பது, சிறப்புகளை விளக்குகிறது.

பூம்புகார் போல, கி.மு., 1600 முதல், கி.மு., 9600 ஆண்டுகளுக்கு முன், கடல்கோள்களால் அழிவுற்ற குமரிக் கண்ட நாடுகள் குறித்தும் ஆய்ந்தறிந்து கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இந்நுாலில் அதி முக்கியமானவை. பண்டைய தமிழ் வளர்த்த பெருநாடுகள் குறித்து, இன்றைய தமிழர்கள் படித்தறிவது அவசியம். அதற்கு இந்நுால் பெரிதும் உதவும் என்பது உண்மை.

– ஆதி

நன்றி: தினமலர், 12/8/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027126.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *