வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும்
வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும், பானுமதி பாஸ்கோ, நெய்தல்வெளி, விலை 100ரூ.
எழுத்து, பேச்சு ஆகிய இரு பெருங்கலைகளில் வல்லவராக விளங்கி மறைந்த வலம்புரி ஜானுடனான தனது அனுபவங்களை நூலாசிரியர் அழகு தமிழில் பதிவு செய்துள்ளார். தனது முதல் சந்திப்பில் வலம்புரி ஜான் பனங்கிழங்கு அளித்து உபசரித்த நினைவில், அதையே புத்தகத்துக்கு தலைப்பாக்கி உள்ளார் நூலாசிரியர்.
வலம்புரி ஜானைப்பற்றிய அரிய பல தகவல்களை சுவைபட எழுதி இருக்கிறார். 1957-ல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்தி, ஆங்கிலம், தமிழுக்கு விளக்கம் அளித்து கலைஞர் கருணாநிதி கூறிய இலக்கணத்தை அப்படியே தந்திருக்கிறார். அது எக்காலத்துக்கும் பொருந்தும். அரசியலில் பல்வேறு வழக்குகளை சந்தித்தபோது, வலம்புரி ஜான் வேடிக்கையாக “எனக்கு எதிரான வழக்குகள் பாஞ்சாலியின் சேலையைப் போல வளர்ந்து வந்தன” என்று கூறியது ரசிக்கத்தக்கது.
ஜெயகாந்தனின் சிறுகதை சிம்மாசனத்தை அண்ணாவுக்கு தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் கூறியது, மனதில் பட்டதை வெளிப்படையாக நேர்மைத்திறத்துடன் பேசுபவர் வலம்புரி ஜான் என காட்டுகிறது. முழுக்க முழுக்க வலம்புரி ஜானைப்பற்றி நூல் என்றாலும் வாசிக்கையில் அலுப்பு தட்டவில்லை என்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 21/11/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818