திராவிட ஆட்சி 50

திராவிட ஆட்சி 50, லெனின், நக்கீரன் பதிப்பகம், விலைரூ.200

திராவிட கட்சிகளின் ஆட்சி தொடர்பாக, 48 பேரின் கட்டுரைகள் தொகுப்பு. ஆட்சியாளர்களின் பலம், பலவீனங்கள் காணக் கிடைக்கிறது. தமிழகத்தில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, ஆட்சிக் காலத்தை பகுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ‘ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பணம் சம்பாதிக்க தொடங்கிய காலம் உதயமானது…’ என, எழுதியுள்ளார்.

கடந்த, 1967-ல் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தார்; தி.மு.க., 19 ஆண்டுகளும், அ.தி.மு.க., 31 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளன. இரண்டையும் சம தட்டில் வைப்பதோ, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளை சமமாகப் பாவிப்பதோ சரியல்ல போன்ற கருத்துக்கள் நிரம்பியுள்ளன.

‘தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசுவோர், ‘திராவிடர்’ எனப்படுகின்றனர். இந்த அடையாளத்தை, தமிழர் தவிர யாரும் கொண்டாடுவதாக தெரியவில்லை’ என்கிறார் ஒரு கட்டுரையாளர்.
‘1967-க்குப் பின் பிறந்த பலர் தமிழர் என்றே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். ‘திராவிடம்’ என்ற அடையாளம் தேவையில்லை என எண்ணுகின்றனர்’ என, ஒரு கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற கருத்துக்கள் நிரம்ப உள்ளன. தமிழகத்திற்கு, திராவிடம் செய்துள்ள நன்மை, தீமைகளை அலசும் நுால்.

– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

நன்றி: தினமலர், 10/5/20

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000030596_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *