திருவருட் பயன் விளக்க உரை

திருவருட் பயன் விளக்க உரை, ஆ.ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.250.

 

சைவ சித்தாந்த ஆசாரிய பரம்பரையில் வந்த உமாபதி சிவம், 600 ஆண்டுகளுக்கு முன் இயற்றிய, ‘சிவப்பிரகாசம்’ நுாலை விளக்கும் வகையில், அவரே படைத்த விளக்கவுரை நுால். சிவப்பிரகாசம் நுாலில் கூறப்பட்டுள்ள, பொங்கொளி ஞான வாய்மை, அதன் பயனை இணைத்துப் பயில்வதால் கிட்டுவதே திருவருட்பயன் என்பதாக முன்வைத்து பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.

திருவருளின் இயல்பும், திருவருளால் உயிர்கள் அடையும் பயனும், உயிருக்கான விளக்கமும் எளிய நடையில் தரப்பட்டுள்ளது. ஞானத்தின் ஒளி நிலையும் அஞ்ஞானத்தின் இருள் நிலையும் உணர்த்தி, மூவகை உயிர்களுக்கு ஞானம் உணர்த்தும் முறையை விவரித்து, கண்டு கேட்டு சிந்தித்து அறியும் நெறிகளைக் கூறி, உயிர்த் துாய்மையால் அருளொளியை அடையும் முறைமை எளிமையாக வழங்கப்பட்டுள்ளது.

உலகெலாம் நீக்கமற பரவியுள்ள இறைமையையும், உயிர்களின் இயல்புகளையும் தெளிவுபடுத்தி, குற்றமற்ற வாழ்க்கைக்கான நுட்பமான விளக்கங்களைத் துாய ஆன்மிக நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால்.

– மெய்ஞானி பிரபாகரபாபு.

நன்றி: தினமலர்,18/7/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031444_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *