அரவான் களப்பலி

அரவான் களப்பலி, கே.பாலகங்காதரன், அருள்நிதி நுாலகம், விலைரூ.330.

மகாபாரதத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் வந்து, மிகப்பெரிய விஷயங்கள் செய்தவர் அரவான். பஞ்ச பாண்டவர்களின் குணநலன், அவர்களின் சிறப்புகள், பாஞ்சாலியின் வரலாறு, உலுாபி என்ற நாகக்கன்னி யார்? அவர் அர்ஜுனன் மீது வைத்துள்ள காதல் எத்தகையது போன்ற வரலாற்றை இந்நுால் விவரிக்கிறது.

தெருக்கூத்து, நாடகம் வாயிலாக அறிந்த அரவான் களப்பலி நிகழ்வை, இன்றைய தலைமுறை அறியும் விதமாக, பல மனிதர்களை சந்தித்து விளக்கம் பெற்று எழுதியுள்ளார் ஆசிரியர். அரவானை தெய்வமாக திருநங்கையர் வழிபட்டு வருவதையும், களப்பலி எதற்கு, எப்போது கொடுக்க வேண்டும்; அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விவரிக்கிறது.

– டி.எஸ்.ராயன்.

நன்றி: தினமலர், 19/9/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031637_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *