ஈசனை உணரலாம் வாங்க
ஈசனை உணரலாம் வாங்க, ஆ.ஞானகுரு, தமிழ்வனம், விலை 110ரூ.
மதுரை அருகே உள்ள புனிதத் தலமான சதுரகிரிக்குச் செல்பவர்களுக்குப் பயன் தரும் வழிகாட்டிப் புத்தகம் போல இந்த நூல் அமைந்து இருக்கிறது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கு குழந்தை வரம் அருளிய வல்லப சித்தர் என்பவரின் வாழ்க்கை விவரத்துடன் தொடங்கும் இந்த நூலில், சதுரகிரியில் எந்த எந்த சித்தர்கள் எங்கே வாழ்ந்தார்கள்? அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், அந்தச் சித்தர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் செல்வது எப்படி? என்ற அனைத்து விவரங்களும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. சதுரகிரியில் இப்போது வாழ்வதாகக் கருதப்படும் 27 சித்தர்களின் விவரம், அவர்களது ஆசிரமங்களின் இடங்கள் மற்றும் அந்த இடங்கள் உள்ள திரச விவரம் ஆகியவை பட்டியலாகக் கொடுத்து இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, நவம்பர், 2019.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818