ஏதிலி

ஏதிலி, அ.சி.விஜிதரன், சிந்தன் புக்ஸ் வெளியீடு, விலை: ரூ.250.

ஈழப் போரின் பின்னணியில் எவ்வளவோ நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதன் சில பக்கங்கள் இன்னும் ஆழமாக அணுகப்படாமலே இருக்கின்றன. போரால் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை மகத்தான இலக்கியங்களாக்கிய ஷோபாசக்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும்” என்றார்.

இந்த வரிசையில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் ஈழ அகதிகள் பற்றியது. எஸ்.ஏ.உதயன் எழுதிய ‘தெம்மாடுகள்’ நாவலும், தொ.பத்தினாதன் எழுதிய ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’ கட்டுரைத் தொகுப்பும் இந்தக் களத்தை அடிப்படையாகக் கொண்டவை. சமீபத்தில், அ.சி.விஜிதரன் எழுதி ‘சிந்தன் புக்ஸ்’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஏதிலி’, தமிழக முகாம்களின் சகல பரிமாணங்களையும் பேசும் முக்கியமான நாவல்.

நன்றி: தமிழ் இந்து, 15/7/20.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000020437_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.