இமயமலைச் சாரலிலே
இமயமலைச் சாரலிலே, டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ.
பொதுவாக பயண நூல் என்றால், அது பயணித்தவரின் அனுபவங்களின் வடிகாலாக மட்டுமே இருக்கும். ஆனால் “நாடக மன்னர்”அவ்வை டி. சண்முகத்தின் மகனான டி.கே.எஸ். கலைவாணன், அந்த மரபை மீறி தனது பயணத்தின் அனுபவங்களால் மற்றவர்கள் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில் இதனை ஆக்கி இருக்கிறார்.
பயண ஏற்பாட்டாளர் மூலம் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்துவார் போன்ற இடங்களுக்குச் சென்ற அவர், அங்கே பார்க்க வேண்டிய இடங்கள், தங்கும் இடத்தின் வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை பற்றியும், இந்த பயணத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து விரிவாக எழுதி இருப்பது படிக்க வியப்பாக இருப்பதுடன், அவருடன் பயணம் செய்தது போன்ற உணர்வைத் தருவதாகவும் இருக்கிறது.
பயண ஏற்பாட்டாளர் மூலம் சுற்றுலா செல்பவர்களுக்கு நல்ல வழிகாட்டி நூலாகவும் இதனை அமைத்து இருப்பது பாராட்டத்தக்கது.
நன்றி: தினத்தந்தி, 8/6/2016.