கடாரம் வென்றான் காவியம்
கடாரம் வென்றான் காவியம், மேத்தா சரஸ்வதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 150ரூ.
தமிழகத்தில் சோழப் பேரரசை வேரூன்றச் செய்த விஜயாலயச் சோழர், ஆதீத்த சோழர் ஆகியோரின் வீரத் தீரச் செயல்களையும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும் நாவல் வடிவத்தில் ருசிகரமாகத் தந்துஇருக்கிறார் ஆசிரியர்.
திருப்புறம்பயம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், விஜயாலயச் சோழர் தனது கால்களின் பலத்தை இழந்த நிலையிலும் அடுத்தடுத்து வந்த வீரர்களின் தோள் மீது அமர்ந்தபடி போரிட்டு வெற்றி வாகை சூடிய வரலாற்றை சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டி இருக்கிறார்.
இந்த நாவல் முதல் பாகம் என்றும், அடுத்தடுத்து வரும் பாகங்களில் அனைத்து சோழர்களின் வரலாற்றையும் கூறப்பபோவதாக அவர் தெரிவித்து இருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818