கண்டி வீரன்
கண்டி வீரன், ஷோபாசக்தி, கறுப்புப் பிரதிகள், விலை 160ரூ.
ஈழத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் ஷோபாசக்தி. அவரின் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. மேம்போக்கான வாசிப்பு தவிர்த்து, ஆழ்ந்த கவனிப்பை வேண்டுபவை அவரின் கதைகள். அவரின் படைப்பு மொழி, ஆக்கம், கதையை இறுதிக்கு நகர்த்தும் விஷயம் எல்லாமே மிகுந்த அக்கறைக்கு ஆட்பட்டு நடந்தேறும்.
படித்து முடித்ததற்குப் பின்னாலும், நம் மனசை இறுக்கி, அசை போடத் தூண்டும் அவர் எழுத்து. இதில் இருக்கிற ‘சுண்டி வீரன்’ சிறுகதை, கண்டிப்பாக விவாதத்திற்கு உட்பட வேண்டியது. அகதி வாழ்வில் துயர் உற்றாலும் முழுமூச்சோடு இயங்கிக் கொண்டிருப்பது ‘ஷோபா’வின் சாதனை. கண்டி வீரனைப் படித்து முடித்ததும், நமக்குள் ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நம்மை நிறுத்தி விடுகிறார். நிறைந்த காயங்களைக் கொண்ட அவர் எழுத்தின் தன்மை அவ்வளவு முக்கியமானது.
நன்றி: குங்குமம், 9/9/2016.