காரிகா வனம்

காரிகா வனம் (சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்) , தொகுப்பாசிரியர்: சுப்ரபாரதி மணியன், காவ்யா, பக்.176, விலை ரூ.180.

சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் 15 சிறுகதைகள் அடங்கிய நூல். ‘பெண்களின் பார்வையில் உலகைக் காண்பது’ இச்சிறுகதைகளில் காணக் கிடைக்கிறது. குடிகார கணவனால் சின்னாபின்னமாகிப் போன குடும்ப வாழ்க்கை, அதனால் நெறி தவறி வேறு ஒருவனுடன் தொடர்பு, அதைக் கண்டித்து வீட்டை விட்டு வெளியேறும் வளர்ந்துவிட்ட பிள்ளைகளைச் சித்திரிக்கும் ‘சூதாடியின் வாரிசுகள்’ சிறுகதை, வளர்ந்த மகன் அம்மாவுக்கு அடங்காமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் எதிர்த்து எதிர்த்துப் பேசுவது, எதிர்வீட்டுப் பெண்ணைக் காதலிப்பது எல்லாவற்றையும் தாங்காத தாய் மாரடைப்பில் மரணம் அடைவது என்பதைச் சித்திரிக்கும் ‘ஒரு கண் மூடியது’ சிறுகதை ஆகியவை குடும்பத்தில் ஏற்படும் முரண்களை, தலைமுறை இடைவெளிகளைச் சித்திரிப்பவையாக உள்ளன.

நன்றி,தினமணி , 13-04-2020

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *