குறள் காட்டும் விலங்கு பறவைகள்

குறள் காட்டும் விலங்கு பறவைகள், பீ.ஜோசி அபர்ணா, திருவள்ளுவர் புத்தக நிலையம்.

திருக்குறளைப் பலரும் பலவித மாக ஆராய்ந்து இருக்கின்றனர். ஆனால், இந்த நுாலின் ஆசிரியரான பள்ளி மாணவி, ஜோசி அபர்ணா, வித்தியாச மான கோணத்தில் திருக்குறளைப் பார்த்திருக்கிறார் என்றால், அது மிகையாகாது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து தேடிப் பிடித்து, இந்த நுாலை எழுதியிருக்கிறார்.

வெறுமனே விலங்குகள், பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பட்டியல் மட்டும் தராமல், அவற்றின் குணநலன்கள், மனிதனுக்கு அவை எப்படி பொருந்துகிறது என்பதையும் விளக்கி இருக்கிறார்.நுாலின் பிற்பகுதியில், விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த அட்டவணை சேர்த்திருப்பது அழகு. தன் வீட்டில் ஒரு நுாலகம் துவக்கி நடத்தி வரும் இவரை, ஒரு குழந்தை மேதை என்று அழைப்பதில் தவறில்லை.

நன்றி: தினமலர்

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *