எம்.கே.டி. பாகவதர் இசையும் வாழ்க்கையும்
எம்.கே.டி. பாகவதர் இசையும் வாழ்க்கையும், டி.வி.பாலகிருஷ்ணன், ஓல்டு மெட்ராஸ் பிரஸ், பக். 296, விலை 499ரூ.
எத்தனையோ பேர் பாகவதர் என்ற பட்டத்தைப் பெற்றாலும், பொதுவாக பாகவதர் என்றால் தியாகராஜ பாகவதர் ஒருவர் என்ற கருத்தை இன்றைய புதிய யுகமும் மறக்காது. பொன்நிற மேனி, நெற்றியில் ஜவ்வாது பொட்டு, தலையில் சுருண்ட முடி ஆகியவை அவரது சிறப்பை அலங்கரிக்கும் தோற்றம்.
நகைத் தொழிலாளியின் குடும்பம் என்றாலும் சிறுவயது முதலே இசை அவரை ஆட்கொண்டது. அதனால் முதலில் அவரது தந்தை கோபத்திற்கு ஆளாகி வீட்டை விட்டு வெளியேறி, கடைசியில் கடப்பாவில் தந்தை அவரைக் கண்டுபிடித்தார். ஆனால், அங்கே உள்ள மக்கள் தியாகராஜன் பாட்டில் மயங்கினர். அதைக்கண்ட தந்தை மலைத்தது வரலாறு.
பெரிய பாடகரான பின் அவர் சினிமா உலகில் வெற்றி பெற்றாலும், அவர் இசைக்கச்சேரி என்பது மாபெரும் மக்கள் கூட்டத்தை சேர்த்தது. அதிகமாக சம்பாதித்த அவர் பள்ளிகள் வளர்ச்சி போன்றவற்றிற்கு பணத்தை அள்ளித்தந்த வள்ளல்.
பாபநாசம் சிவன், தண்டபாணி தேசிகர் ஆகியோர் இவர் இசையில் மயங்கியவர்கள். லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிறை சென்ற அவர், வெளியே வந்தபின் அழகை இழந்தபோதும், குரலை இழக்கவில்லை. தன், 50 வயதில் மரணத்தை தழுவிய அவர், தமிழக மக்கள் மனதில் நீங்காமல் நிற்பவர். அவர் வாழ்வை விளக்கும் அரிய நுால்.
நன்றி: தினமலர், 23/6/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818