மனம் செய விரும்பு

மனம் செய விரும்பு, இசைக்கவி ரமணன், வானதி பதிப்பகம், பக். 80, விலை 70ரூ.

அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று சிறு வயதில் படித்திருக்கிறேன். ‘மனம் செய்ய விரும்பு’ என்கிற இந்த நுாலின் தலைப்பே எனக்கு நேர்மறை எண்ணங்களை உண்டு பண்ணியது.

ஒரு சிறிய நுாலில் ஒப்பற்ற கருத்துகளை கூறி மனதை பலப்படுத்தும் வித்தையை கற்றுத் தந்திருக்கிறார் ரமணன். மனம் விரும்பி ஒரு செயலை செய்யும் போது உறவுகள் பலப்படும்.

இன்றைய காலத்தில் மனம் புண்படியாக பேசுவது, வெறுப்புணர்வை வளர்ப்பது, தெய்வங்களையும், தெய்வ புலவர்களையும் நிந்தனை செய்வது என்று முகநுால், டுவிட்டர் என்று எங்கு நோக்கினும் மனங்களை சிதைக்கும் கருத்துகள் தான் பரவி வருகின்றன.

நம் மனதின் ஆழத்தில் ஜோதியாக இறைவன் இருக்கிறான். அவனே நாம் பருக வேண்டிய அமுதம் என்பதை எளிமையாக விளக்குவதே மனம் செயய விரும்பு என்ற இந்த நுால்!

–நரசிம்மன்

நன்றி: தினமலர், 11/12/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *