மனதில் பதிந்தவர்கள்

மனதில் பதிந்தவர்கள், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 150ரூ.

தன்னைக் கவர்ந்த பிரமுகர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை ‘மனதில் பதிந்தவர்கள்’ என்ற தலைப்பில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கட்டுரைகளைக எழுதி வருகிறார்.

இந்த வரிசையில் எட்டாவது புத்தகம் இப்போது வெளிவந்துள்ளது. வெ. இறையன்பு, நீதியரசர் மு. கற்பக விநாயகம், ‘கிருஷ்ணா சுவீட்ஸ்’ முரளி, ரவிதமிழ்வாணன், கவிஞர் முடியரசன் உள்பட 19 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இதில் அடங்கியுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு என்றால் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. தன்னை கவர்ந்தவர்களை எழுத்தோவியங்களாகத் தீட்டி முத்திரை பதித்துள்ளார் ஏர்வாடியார்.

நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *