மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் – பகுதி 1

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் – பகுதி 1, ப.மருதநாயகம், எழிலினி பதிப்பகம், விலை: ரூ.350

ஆங்கிலத்தின் வாயிலாகவே தமிழில் நாவல் வடிவம் அறிமுகமானது. ஆனால், தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனங்களில் மேலை இலக்கியக் கோட்பாடுகளையெல்லாம் பொதுவாகக் கவனத்தில் கொள்வதில்லை. ரசனை அடிப்படையே நாவல்களின் தரம், குணம் யாவற்றையும் தீர்மானிக்கிறது.

தமிழ்-ஆங்கில இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான ப.மருதநாயகத்தின் இந்த நூல், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி தற்காலம் வரையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல் படைப்புகளை மேலை இலக்கியக் கோட்பாடுகளின் பார்வையில் திறானாய்வு செய்யும் முயற்சி.

இரண்டு பகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. முதல் பகுதியில் பாரதியார், ராஜமய்யர், மாதவையா, க.நா.சு, தி.ஜானகிராமன், கல்கி, அகிலன் முதலான முக்கியப் படைப்பாளிகளின் 14 படைப்புகள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. நாவல்களின் குறைநிறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவை எழுதப்பட்ட காலத்தின் சமூக, அரசியல் நிலைகளின் சுவடுகளைத் தேடும் முயற்சியாக அமைந்திருக்கிறது இந்த ஆய்வு. இந்நூலில் இடம்பெற்றுள்ள ‘நாவல் இலக்கியம்’ என்ற தலைப்பிலான கட்டுரை, மேலை இலக்கிய விமர்சகர்கள் நாவலின் தனிச்சிறப்புகளாகக் கூறியதையெல்லாம் தொகுத்துத் தந்திருக்கிறது.

மருதநாயகத்துக்குத் தமிழ் நாவல்கள் பற்றி கடுமையான விமர்சனங்கள் இல்லாலும் இல்லை. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ பற்றித்தான் பெரும்பாலும் பேசப்படுகிறது. அவரது ‘அன்பே ஆரமுதே’, ‘செம்பருத்தி’ இரண்டும் முறையே லட்சியவாதத்துக்கும் எதார்த்ததுக்கும் உதாரணமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கூடவே, தி.ஜானகிராமனிடமிருந்து அவரது சமகாலத்தினரும் பின்வந்தவர்களும் கற்றுக்கொள்ள வேண்டியதை, தவறவிட்டுவிட்டதைக் குறித்து தனது வருத்தத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

நன்றி: தமிழ் இந்து, 21/3/20.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030599_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *