முறிந்த வானவில்
முறிந்த வானவில், கோ.வசந்தகுமாரன், தமிழ் அலை வெளியீடு, விலை: ரூ.100
முறிந்தாலும் வானவில்தான்
‘கவிதை என்பது ரொட்டி மாதிரி; படித்தவர்களும் பாமரர்களும் மகத்தான மானுடக் குடும்பத்தினர் அனைவரும் அப்படைப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என பாப்லோ நெரூதாவின் கருத்தை முன் பக்கத்தில் பதிவிட்டு, அதைத் தொடர்ந்த பக்கங்களில் தொடரும் வசந்தகுமாரனின் கவிதைகள் அந்தக் கூற்றுக்கு சான்று பகிர்கின்றன.
‘ஒரு பறவையை வரைவதற்கு முன்
ஒரு கூட்டை வரைந்துவிடு
பாவம் எங்கு போய் அவை தங்கும்’
என்பன போன்ற கவிதைகள் கருணையின் கோப்பையில் தேநீர் அருந்துகின்றன.
‘என்னை வழியில் கண்டால்
நான் தேடுவதாக
சொல்லுங்கள்’
என்று எழுதுவதும்,
‘முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடியில்
எனக்கு எதிரே நிற்கிறான்/
என் முதல் எதிரி’
என்பதும் வசந்தகுமாரனின் அகத் தோரணையைக் காட்டுகின்றன.
‘எல்லோரும்
என்னைக் கைவிட்ட பிறகு
என் ஒரு கையால் மறு கையைப்
பற்றிக்கொண்டு எழுந்துவிட்டேன்’
போன்ற நம்பிக்கைக் கூழாங்கற்களும் புத்தகத்தில் ஆங்காங்கே கரையொதுங்கிக் கிடக்கின்றன.
நன்றி: தமிழ் இந்து, 15/5/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030726_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818