நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும்
நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும், பொறியாளர் ஏ.சி.காமராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.230
கங்கையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழிப்பாதை ஏற்படுத்த முன்னோடித் திட்டமாக உருவாக்க எடுத்த உழைப்பை எடுத்துரைக்கும் நுால். முயற்சிக்கு இடையே சந்தித்த அரசியல் தலைவர்கள் பற்றியும், அவர்களது நேர்மைத் திறம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.
காமராஜர், ராமகிருஷ்ண ஹெக்டே, அப்துல் கலாம், தமிழக முதல்வர்கள் என்று பலருடன் கொண்டிருந்த தொடர்புகளையும், அவர்களிடம் எடுத்துரைத்த தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான திட்டங்களையும் எளிய தமிழில் எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவில் நீர் மேலாண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக்கி உள்ளார். அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் உள்ளது உள்ளபடி தெரிவித்துள்ளார். நாட்டு வளர்ச்சியை முன்னெடுக்கும் நல்ல நுால்.
– ராசபாண்டியன்
நன்றி: தினமலர், 30/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818