நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை, பெருமாங்குப்பம் சா. சம்பத்து, ரேணுகாம்பாள் பப்ளிஷர்ஸ், பக். 256, விலை 200ரூ.

“நீரின்றி அமையாது உலகு‘’ என்று சொல்லித் தெரியும் நிலை இப்போதில்லை. ஆனால் நீரைப் பாதுகாக்கும் முயற்சிகள், நீர் வளத்தை மேம்படுத்தும் செயல்களை எல்லாம் நாம் செய்கிறோமோ? என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

இந்நூலில் நீரின் தோற்றம், நீரின் இன்றியமையாமை, நீர் வளத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற விவரங்களை மிகவும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.

தேசிய நதிநீர் இணைப்பு சாத்தியமா? ஏன் நதிகளை இணைக்க வேண்டும்? நீர்வழிச் சாலைகளால் என்ன பயன்? பருவமழை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயல் ஆகியவை உருவாவது எப்படி? நம் முன்னோர்கள் நீரைச் சேகரிக்க என்னவிதமான வழிமுறைகளைப் பின்பற்றினார்கள்? என்று நீர் தொடர்பான எல்லா விவரங்களையும் தெளிவாகச் சொல்லும் சிறந்த நூல்.”

நன்றி: தினமணி, 20/2/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *