ரசிக்க… சமஸ்கிருதம்

ரசிக்க… சமஸ்கிருதம், அபிநவம் ராஜகோபால், ஜெனரல் பப்ளிஷர்ஸ், விலைரூ.160.

சமஸ்கிருதத்தில் உள்ள அறக் கருத்துகளையும், நீதிகளையும் எளிய முறையில் அறிந்து கொள்ள ஏதுவாக, எட்டு தலைப்புகளில் வாழ்வியல் நுட்பங்களை பதிவு செய்துள்ளார்.

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், தெருவில் பொதுமக்கள் குப்பையைக் கொட்டினால் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலை பதிவு செய்துள்ளது.

வேத காலத்தில் ஆண்களுடன், பெண்களும் சில தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சாணக்கியரின் காலத்தில், ஓலைச் சுவடிகளில் தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. நான்கு வேதங்கள் குறிப்பிடும் அறக் கருத்துகள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன.

குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும். பணம் படைத்தவர் பக்கம் நீதி சாய்ந்து விடலாகாது போன்ற பல நீதிக் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

– பேராசிரியர் இரா.நாராயணன்

நன்றி: தினமலர்,11/7/21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *