சமூகவியல் பார்வையில் பாரதியார்

சமூகவியல் பார்வையில் பாரதியார், க.ப.அறவாணன், தமிழ்க் கோட்டம்,பக்.232,  விலை ரூ.200. 

மகாகவி பாரதியின் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றில் இருந்து அவர் காலத்திய சமூகம் தொடர்பான அவருடைய கருத்துகளை விளக்கிக் கூறும் நூல்.

பாரதியாரின் தமிழ் வழிக் கல்வி பற்றிய கருத்து, சாதி ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய அவருடைய பார்வை, பெண் சுதந்திரம், தேசப் பற்று குறித்த அவருடைய கருத்துகள், பாரதி விரும்பிய குடியாட்சிமுறை, பொதுவுடமை குறித்த அவருடைய எண்ணம், பிற மொழி இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வை என பல்வேறு பரிமாணங்களில் பாரதியை இந்நூல் பார்க்கிறது.

பாரதியின் படைப்புகளில் இருந்து பல சுவையான பகுதிகளை எடுத்துக்காட்டுகளாக நூலாசிரியர் கூறியிருப்பது, பாரதியைப் பற்றிய பல புதிய வெளிச்சங்களை நமக்குள் பாய்ச்சுகிறது.

பாரதியின் மறைவுக்குப் பிறகும் அவருடைய தாக்கம் எந்த அளவுக்கு தமிழ் இலக்கிய உலகில் இருந்தது என்பதையும், அவர் வழித்தோன்றல்களான கவிஞர்களையும் படைப்பாளிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. பாரதியாரைப் பற்றிய தெளிவான புரிதலை வந்தடைய இந்நூல் உதவும்.

நன்றி: தினமணி, 16/8/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *