சிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்

சிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள், மருத்துவர் கைலாசம் சுப்ரமண்யம், வானதி பதிப்பகம், விலைரூ.125.

அளவிலா பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு தேவை அறிந்தும், சூழலுக்குப் பொருத்தமாக வெளிப்பட்டு அருள் செய்கிறான் இறைவன். உடல் சார்ந்த நோய்களுக்கு, உள்ளம் சார்ந்த இறை நம்பிக்கை மருந்தாக அமையலாம் என உணர்த்துகிறது நுால்.

நாயன்மார்களுடன் இறைவன் நடத்திய திருவிளையாடல்களின் சுருக்கமே என கூறியுள்ளது, உண்மைத் தன்மையை உணர்த்துகிறது. சுந்தரரை சிவபெருமான் தடுத்தாட்கொண்டது, திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்தது, பரவையார் வீட்டிற்குத் துாது போனது, திருநாவுக்கரசருக்கு சூலை நோய் கொடுத்து சிவநெறிக்கு மாற்றியது என, பல செய்திகளை பக்திப் பரவசத்துடன் தந்துள்ளார்.

தேவையான இடங்களில் நுால்களை மேற்கோள் காட்டுவதும், திருக்கோவில்களின் விபரங்கள் கூறுவதும் பெருமை சேர்க்கின்றன.

– டாக்டர் கலியன் சம்பத்து

நன்றி:தினமலர், 17/1/2021.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030975_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *