சொல்வது நிஜம்
சொல்வது நிஜம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 166ரூ.
மூத்த பத்திரிகையாளர் மணா எழுதிய நெஞ்சைத் தொடும் கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ் சமூகக் கட்டமைப்பில் அடிமட்டத்தில் வாழக்கூடிய விளிம்பு நிலை மனிதர்களை நேரில் கண்டு அவர்கள் படும் துயரங்களையும், அவலங்களையும் அருமையாகப் பதிவு செய்துள்ளார்.
நாட்டுப்புறச் சிறுவர்களின் கொத்தடிமை வாழ்க்கை, பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சின்னஞ் சிறுமிகளின் வாழ்க்கையை நேரலை போல விவரிக்கிறார். பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் அவரது தாயாருக்கு சலுகை அளிக்க மறுத்ததையும், தேர்தல் பிரச்சாரத்தின்போது எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் காட்டிய அன்பையும், விருந்தோம்பலையும், தமிழ் நாட்டில் காதலுக்காக பதவியைத் துறந்த, புதுக்கோட்டை சமஸ்தான மன்னரைப் பற்றியும் சுவைபடச் சொல்கிறார்.
நன்றி: தினத்தந்தி, 1/3/2017.