சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்
சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 330ரூ.
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் மனைவி சுகந்தி. சிற்நத கவிஞரான அவர், கவிதைகளுடன் சிறுகதைகளும் எழுதினார். அற்புதக் கவிஞராக புகழ் பெற்ற சுகந்தி திடீரென மனநிலை பாதிக்கப்பட்டார். அதன் பிறகும் கவிதைகள் எழுதினார். 11/2/2009ல் காலமானார்.
அவர் முன்பு எழுதிய ஆழமான கவிதைகளும், பிற்காலத்தில் எழுதிய கவிதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சுகந்தியின் கணவர் சுப்ரபாரதிமணியன் இந்நூலை தொகுத்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 23/3/2017