சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல்

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல், முனைவர் த.தமிழரசி, அய்யா நிலையம் வெளியீடு, பக். 208, விலை 200ரூ. ஒவ்வொரு படைப்பாளனுக்கும் தனக்கென்று ஒரு மனக்கலவை இருக்கிறது. அவற்றை முற்றிலுமாக ஆய்ந்தால், இறுதியாக அப்படைப்பாளியின் வரைபடம் ஒன்று புலனாகும். முப்பது ஆண்டுகளாக தமிழிலக்கியத்தின் கதைக்களத்தில் உலா வரும் சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளை பலவகையிலும் ஆய்ந்து, அவரை ஒரு வாழ்வியல் படைப்பாளியாக நிலை நிறுத்துகிறார் முனைவர் தமிழரசி. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் கதை மாந்தர்களிடையே வெளிப்படும் எதிர்பார்ப்பற்ற மனிதநேயம், பயன் பெற்றதும் நன்றி மறத்தல், நெருக்கடியிலும் சுயநலம், துன்பத்திலிருந்து மீட்கும் நம்பிக்கைகள், […]

Read more

தீயரும்பு

தீயரும்பு, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், அய்யா நிலையம் வெளியீடு, விலை 150ரூ. இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பிது. தான் வாழ்ந்த கிராமத்தின் புழுதி படிந்த வாழ்க்கையை, வியர்வை பிசுபிசுக்கும் மனிதர்களை அப்படியே தன் கதைகளுக்குள்ளும் நடமாட வைத்துள்ளார். “கொம்பால குருணிப்பாலு கற்தாலும் கூர புடுங்கற மாடு உதவாது…” என்பது போன்ற தஞ்சை வட்டார மக்களின் வழக்குச் சொல்லாடலில் வாசிப்பை விறுவிறுப்பாக கடத்திச் செல்கிறது ஞானதிரவியத்தின் மொழிநடை. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more