ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை

ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை, அண்டனூர் சுரா, இருவாட்சி இலக்கியத் துறைமுகம், விலை 180ரூ. அண்டனூர் சுராவின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் 19 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு சமூக நிகழ்வின் நிகழ்காலப் பதிவாக நம் கவனத்தை ஈர்க்கிறது. சிக்கலற்ற கதைப்போக்குகளுடன் இயல்பாக உள்வாங்க கூடிய கதைகளாக எல்லாக் கதைகளுமே இருக்கின்றன. வெறும் உரையாடல்களோடு மட்டுமே நிறைவுறா இக்கதைகள், ஆசிரியரின் அரசியல் சார்பையும் வெளிப்படுத்துகின்றன. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more