சங்க கால வானிலை

சங்க கால வானிலை, கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், விலைரூ.300 வானிலைக்கும், காலநிலைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கத் துவங்கி, சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்தும் வானிலைச் சிந்தனைகளை ஆய்வு நோக்குடன் வெளிப்படுத்தியுள்ள நுால். காற்று வீசுதல் குறித்தும், மழை பொழிவது குறித்தும், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கொண்டிருந்த கருத்தை, இலக்கியச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. புகை மேகம், பஞ்சு மேகம், யானை மேகம் என்று உருவெளித் தோற்றத்தை வைத்து மேகத்தை அடையாளப்படுத்தியது அறிவியல் நுட்பத்துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆறு காலங்களாக, ஓர் ஆண்டு பிரிக்கப்பட்டுள்ள தன்மை, மாறாமல் இருப்பதை, வானிலை […]

Read more

மாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்

மாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள், கு.வை.பாலசுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. விலங்குகளை பார்ப்பதும், அவற்றை பற்றி கேட்பதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். வனவிலங்கு பூங்காவுக்கு செல்வதை அனைவரும் விரும்புவர். பல மிருகங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட நமக்கு எதுவும் தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில், காண்டாமிருகம், யானை, நீர் யானை, ஒட்டகசிவிங்கி, கடமா என்னும் காட்டெருமை, கடுங்கால் ஒட்டகம் ஆகிய விலங்குகள் பற்றி விபரமாக, தெளிவாக, எளிய நடையில் ஆசிரியர்கள் […]

Read more

சங்க கால வானிலை

சங்க கால வானிலை,  கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், பக்.272, விலை ரூ.300. நவீன வானிலையியல் காற்றைப் பற்றி, மேகத்தைப் பற்றி, மழையைப் பற்றி, காலநிலையைப் பற்றி, வானிலை பற்றி வைத்துள்ள அறிவியல் வரையறைகள் நூலில் விளக்கப்படுகின்றன. அந்த வரையறைகளுக்குப் பொருந்துவிதமாக சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் தகவல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக காற்றைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.  வடக்குத் திசையிலிருந்து வீசும் காற்றை வாடை, வடந்தை, ஊதை எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்றை ;கொண்டல் எனவும், மேற்கிலிருந்து வீசும் காற்றை கோடை எனவும், தெற்கில் […]

Read more