தாயில்லாமல் நான் இல்லை

தாயில்லாமல் நான் இல்லை, சம்சுல் ஹூதா பானு, கோதை பதிப்பகம், பக்.204, விலை ரூ.200. ஒவ்வொருவருக்கும் தனது குழந்தைப் பருவம் குறித்த முதல் நினைவு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். சிலருக்கு வாழ்நாளெல்லாம் அந்நினைவு பசுமையாக இருக்கும். பலருக்கு ரண வேதனையாக இருக்கும். அந்தப் பலரில் ஒருவராக தனது வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார் இந்நூலாசிரியர். மூன்று அண்ணன்கள், ஓர் அக்காவுக்குப் பிறகு ஐந்தாவது குழந்தையாக பெண்ணாகப் பிறந்த நூலாசிரியர், குழந்தைப் பருவத்திலேயே தாயைப் பறிகொடுத்துவிடுகிறார். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டும் இன்று சிறந்த குடும்பத் தலைவியாகப் பரிணமித்துள்ளார். […]

Read more