தமிழர் மரபும் அறிவியல் பார்வையும்
தமிழர் மரபும் அறிவியல் பார்வையும், ச.ராமமூர்த்தி, லாவண்யா பதிப்பகம், விலை 150ரூ. தொன்மை சிறப்பு வாய்ந்த சங்கச் சான்றோர் தொடங்கி இன்றைய கபிலன் வைரமுத்து வரை வாழையடி வாழை என வழிவந்த கவிஞர்களின் படைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி தான் எழுதிய 16 கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார் பேராசிரியர் ச.ராமமூர்த்தி. முற்றிலும் திறனாய்வு கட்டுரைகளை கொண்ட இந்த நூல் கட்டமைப்பு, கருத்து வைப்பு, ஆய்வுநெறி மற்றும் முடிவுரைத்தல் ஆகிய 4 நிலைகளிலும் தனிசிறந்து நிற்கிறது. இந்நூல் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் வழிகாட்டியாக அமையும். […]
Read more