யாளி
யாளி, ச.வைரவ ராஜன், பாவைமதி வெளியீடு, விலை 180ரூ. வித்தியாசமான கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் ஏராளமான தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. தமிழகக் கோவில்களில் மட்டுமே காணப்படும் சிற்பங்களான யாளி என்ற மிருகம் இருந்தது உண்மையான என்ற ஆய்வு பல இலக்கியங்களின் மேற்கோள்கள் வழியாகக் கொடுக்கப்பட்டு இருப்பது புதுமையாக உள்ளது. மேலும் யானை, காகம், நாய், பேய் போன்றவைகள் குறித்தும் ஆழமான கருத்துக்களை நகைச்சுவையுடன் தந்து இருப்பது சிந்திக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. நோய்களைத் தீர்ப்பதற்கு வண்ணங்கள் எவ்வாறு உதவுகின்றன என்ற தகவலும் வியக்க வைக்கிறது. […]
Read more