திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள் (தொகுதி 3)

திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள் (தொகுதி 3), கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ. திரைப்பட பாடலாசிரியர் மதுர பாஸ்கரதாஸ் தொடங்கி பஞ்சு அருணாசலம் வரை 100 பாடலாசிரியர்களையும், அவர்களின் படைப்புகளையும் முதல் தொகுதியில் ஆவணப்படுத்தி, 1963-1981 காலகட்டத்தில் பாடல்கள் எழுதிய 19 பேரையும், அவர்களின் பாடல்களையும் 2வது தொகுப்பில் ஆவணப்படுத்திவிட்டு, இந்த 3ம் தொகுதியை நூலாசிரியர் தந்து உள்ளார். இதில் எம்.ஜி.வல்லபன் தொடங்கி யுகபாரதி வரையில் 21 திரைப்பட பாடலாசிரியர்களின் வாழக்கைச்சுருக்கம், படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. திரைப்படத்துறைக்கு அப்பால் இருந்து ஒருவர், அதுவும் […]

Read more

திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள்

திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள்,  தொகுதி -3, பொன்.செல்லமுத்து,  மணிவாசகர் பதிப்பகம், பக்.320, விலை ரூ.250. ‘சினிமா எக்ஸ்பிரஸ்‘ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் நூல் வடிவம். ஏற்கெனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இந்த மூன்றாம் தொகுதியில் 1979 இல் இருந்து 2001 வரை பாடல்கள் எழுதத் தொடங்கிய கவிஞர்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு திரையிசைக் கவிஞர் எத்தனை படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது ஆண்டு வரிசைப்படியும் அகரவரிசைப் படியும் கூறப்பட்டுள்ளது. கவிஞரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு, அவர் எழுதிய குறிப்பிடத்தக்க […]

Read more