நம் காலத்துக் கவிதை

நம் காலத்துக் கவிதை, (நவீன கவிதை குறித்த கட்டுரைகள்), விக்ரமாதித்யன், படைப்புப் பதிப்பகம், விலை: ரூ.150 . கவிதை எழுதுபவர்கள் அதிகரித்திருக்கும் தற்காலத்தில் கவிதை விமர்சகர்கள் அருகிவருகிறார்கள். எனினும், பல்லாண்டுகளாகக் கவிதை எழுதுவதுடன் கவிதை விமர்சனங்களும் எழுதிவருபவர் கவிஞர் விக்ரமாதித்யன். முன்னோடிகள், தன் சம வயது கவிகள் பற்றி எழுதுவதுடன் இளம் கவிகளைப் பற்றியும் தொடர்ந்து ஆதுரத்துடன் எழுதிவருகிறார். அவரது கவிதை விமர்சன நூல்களின் வரிசையில் தற்போது இந்நூல் வெளியாகியிருக்கிறது. ந.பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன் தொடங்கி தற்காலக் கவிஞர்கள் பிரான்ஸிஸ் கிருபா, அ.வெண்ணிலா இன்னும் இளைய கவிகள் பலரையும் பற்றி எழுதியிருக்கிறார். […]

Read more