உண்மை வாரிசு
உண்மை வாரிசு, ப.பாலசுப்ரமணியன், சங்கர் பதிப்பகம், பக். 152, விலை 150ரூ. திருநங்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாடக நூல். அரவாணிகள் என்று சொல்லும் பெயர் காரணமும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் வெற்றி பெற்ற திருநங்கை பட்டியலும் சொல்லப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அரவாணியாக பிறந்து பெற்றோருக்கு தலைக்குனிவு வரக்கூடாது என்று வீட்டை விட்டு விலகிய பின் அதிர்ஷ்டவசமாக, தொழில் அதிபரின் வாரிசகாக ஆகி, திருநங்கையர் தலைநிமிர வழி காட்டுவதுடன், தன்னை வெறுத்து ஒதுக்கிய பிறந்த குடும்பத்தை சீராக்கியதை அழகாக சித்தரித்துள்ளார். -சீத்தலைச்சாத்தனார். நன்றி: தினமலர், 16/5/21. […]
Read more