திருப்பி அனுப்பும் வானம்!
திருப்பி அனுப்பும் வானம்!, முனைவர் மு.அப்துல் சமது, நேஷனல் பப்ளிஷர்ஸ், விலைரூ.125 உலக நலன், சமூக நலன், தனிமனிதச் சிந்தனையை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள நுால். நபிகளின் கருத்துகளை மையமாகக் கொண்டது. உலகை நன்னெறிக்கண் செலுத்த வேண்டும் என்ற பண்பட்ட உள்ளத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் காணமுடிகிறது. மனித வளமேம்பாட்டுக்குரிய செய்திகளைத் தருகிறது. மனிதர்கள் இறைநெறி நின்று, அறநெறி காத்து, வாழ்வியலைச் செந்நெறிக்கு உட்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு படைக்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு குரான் சொல்லியுள்ள கோட்பாடுகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. நவீன அறிவியலோடு திருமறை வழி நின்று கருத்துகளை விளக்குகிறது. […]
Read more