செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும்

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும், ம.பாபு; காவ்யா, பக்.318; ரூ.320; ஐம்பொன்னில் செம்பு அதிகம் கலந்து வார்க்கப்படும் திருவுருவத்தை செப்புத் திருமேனி என்பர். தொடக்கத்தில் இறைவன் உருவங்களே உருவாக்கப்பட்டன. பின்னர் அரசர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர் திருமேனிகளையும் செப்புத் திருமேனிகளாக வடித்தனர். தமிழகத் திருக்கோயில்களில் இடம்பெறும் கலைப் பாணிகளை வரலாற்று நோக்கில் வகைப்படுத்தி விளக்கியுள்ளார் ஆய்வாளர். பண்டைக் காலத்தில் சிற்பக்கலை இருந்ததற்கான சான்றுகளை சிலப்பதிகாரத்தைக் கொண்டும், சங்க காலத்தில் உலோகங்களால் திருமேனிகள் செய்யப்பட்டதை நன்னன் என்ற அரசனின் வரலாறு கொண்டும் விளக்கியுள்ளது […]

Read more