தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள், சா.கந்தசாமி, சாகித்ய அகாடமி வெளியிடு, விலை 290ரூ.

சுயசரித்திரம் என்பது, இந்தியாவில் முதன் முதலில் தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது என்றும், அதனை எழுதியவர் 1748ம் ஆண்டு புதுச்சேரியில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய ஆனந்தரங்கப் பிள்ளை என்ற தகவலையும் தரும் இந்த நூலில், ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரனார், தமிழ்த் தாத்தா உவே.சாமிநாதைய்யர், பாரதியார், திரு.வி.க., மா.பொ.சி., கலைஞர் கருணாநிதி, ஜெயகாந்தன் ஆகியோர் உள்பட 12 தலைவர்களின் சுயசரிதங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு தலைவர்கள் பற்றிய குறிப்பும், அதனைத் தொடர்ந்து அந்த தலைவர்கள் எழுதிய சுயசரிதமும் இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் சுயசரிதமும் வரலாற்றுப் பொக்கிஷம் போல பல அரிய தவல்களைக் கொண்டு இருக்கின்றன. அந்த தலைவர்களின் எழுத்து நடையிலேயே அவர்களின் சுயசரிதத்தைப் படிக்கும்போது, அவை முழுமையாக அனுபவித்துப் படிக்கும் வகையில் உள்ளன.

சுயசரிதங்கள் மூலம் அந்தத் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களின் சாதனைகள், திறமைகள், நற்பண்புகள் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

நன்றி: தினத்தந்தி 3/7/19,

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029561.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *