தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்
தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும், ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், விலை: ரூ.190
நீரின்றி அமையாது உலகு தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக உருவாகியிருக்கும் தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மூலவராகத் திகழ்ந்தவரும் இளம் பருவத்திலிருந்தே பொதுவுடைமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு சமூக அர்ப்பணிப்போடு செயலாற்றிவருமான நல்லகண்ணுவின் முதிர்ந்த அனுபவப் பார்வையில் எழுதப்பட்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு அனுபவமும் வரலாறும் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளது. 1977-ன் புயல் வெள்ளச் சேதம் தொடங்கி காவிரி நீர்ப் பிரச்சினை, தாமிரபரணிப் பிரச்சினைகளோடு சமகாலச் சிக்கல்களையும் இப்புத்தகம் விவாதிக்கிறது. நல்லகண்ணுவின் கட்டுரைகளோடு அ.சேவியர், பி.கே.முருகேசனும் எழுதியிருக்கிறார்கள். உலக தண்ணீர் தினத்தை இப்புத்தகத்தோடு கொண்டாடுவோம்!
– அருள் பிரகாஷ்.
நன்றி: தமிழ் இந்து, 29/3/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028018.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818