தம்மம் தந்தவன்
தம்மம் தந்தவன், விலாஸ் சாரங், தமிழாக்கம்: காளிப்ரஸாத், நற்றிணைப் பதிப்பகம், விலை: ரூ.260
‘எழுதுவதற்கு முன் எதுவுமில்லை நானுமில்லை, எழுதிய பின் எல்லாம் இருந்தன. நானும் இருந்தேன்’ என்கிற முகப்புக் கவிதையிலே புத்தகத்தின் சுவாரஸ்யப் பயணம் வேகமெடுக்க ஆரம்பித்துவிடுகிறது.
சின்னச் சின்னக் கவிதைகள் மனதின் மேடுபள்ளங்களில் ஏறியும் இறங்கியும் வாசிப்பவரை யோசிக்க வைக்கின்றன. யாருமற்ற கடற்கரை உரையாடல் பாணியிலான கவிதைகள், மனதின் நிகழ்த்துக்கலையாக வடிவம்கொள்கின்றன.
‘அந்தரத்தில்/ ஆயிரம் சைத்தான்கள்/ அரங்கத்தில்/ தெய்வப் புன்னகை’ என்கிற கவிதை ஒரு சந்நிதானத்து மெல்லொளியாய்ச் சுடர்விடுகிறது. ராஜா சந்திரசேகர் தன் கவிதைகளில் அக உலகின் உள்ளார்ந்த பார்வைகளைக் கடத்தியிருக்கிறார்.
சில கவிதைகளில் ஜென் தூறலும், சில கவிதைகளில் தம்மபத வாசனையும் எழுகிறது.
நன்றி: தமிழ் இந்து
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818