தி கோமின்டர்ன் அண்ட் ஏர்லி இந்தியன் கம்யூனிசம்: 1921-1928
தி கோமின்டர்ன் அண்ட் ஏர்லி இந்தியன் கம்யூனிசம்: 1921-1928, பாஞ்சாலி மஜும்தார், டுவார்ட்ஸ் ஃப்ரீடம் வெளியீடு, விலை: ரூ.295
இந்திய விடுதலைப் போராட்டம் முகிழ்விடத் தொடங்கிய நேரத்தில், ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் சோஷலிசக் கருத்துகளும் இங்கே வேர்விடத் தொடங்கின.
லெனின் தலைமை விவாதங்களில் வெளிநாடுகளில் வசித்த இந்திய இளைஞர்கள் பலரும் பங்கேற்றனர். சமூக விடுதலைக்கு முன்பாக காலனி ஆதிக்கத்திடமிருந்து விடுபட வேண்டும் என்றார் லெனின். அதற்கிணங்க எம்.என்.ராய் உள்ளிட்டோர் பம்பாயில் டாங்கே, சென்னையில் சிங்காரவேலர், கல்கத்தாவில் முசாஃபர் அகமது என இந்திய மண்ணில் சோஷலிசக் கருத்துக்களைப் பரப்ப முயன்றுவந்த சிந்தனையாளர்களை எவ்வாறு ஊக்குவித்தனர் என்பதையும், அவர்களுக்குள் நிலவிய கருத்து முரண்பாடுகளையும் கம்யூனிஸ்ட் அகிலம், பிரிட்டிஷ் நிர்வாகத்தின் உளவுத் துறை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றின் ஆவணங்கள் அடிப்படையில் விவரிக்கிறது இந்நூல்.
நன்றி: தமிழ் இந்து, 11/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818