தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே ஏ நீலகண்ட சாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலை ரூ. 500.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை தமிழகத்தில் நடைபெற்ற அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன,

தமிழகத்தின் புவியியல் அமைப்பு, பூர்வகுடி மக்களின் கலாச்சாரம், மௌரியப் பேரரசு, சாதவாகனர்களின் ஆட்சி,  பல்லவர், பாண்டியர் ஆகிய மூன்று அரசுக்கு இடையே நடைபெற்ற மோதல், பாமணி அரசர்கள், விஜயநகரப் பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை மிக விரிவாக இந்நூலில் தரப்பட்டிருக்கின்றன.

குறிப்பிட்ட இந்த வரலாற்று காலத்தில் சமூக, பொருளாதார நிலை, இலக்கியம், சமயம், ஓவியம், கட்டிடக்கலை ஆகியவை எவ்வாறு வளர்ச்சி பெற்றிருந்தன என்பவை தனித்தனித் தலைப்புகளில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரலாறு நூலை படிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள ஏராளமான எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

இக்குறை நீங்கலாக பார்த்தால் இந்த நூல் வரலாற்று ஆர்வலர்களுக்கு சிறந்த கருத்து கருவூலம் என்று கூறலாம்.

 

நன்றி: தினத்தந்தி, 27/11/19.

ந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *