வரங்களை அள்ளித் தரும் வல்லநாடு சித்தர்

வரங்களை அள்ளித் தரும் வல்லநாடு சித்தர், முத்தாலங்குறிச்சி காமராசு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.260.

மனிதனுக்குள் சொல்லொணாத ஆற்றல்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தி தெய்வ நிலைக்கு உயர்பவர்களை சித்தர்கள் என அழைக்கிறோம். சித்து என்றால் உயிர். சித்தர் என்றால் உயிர் உடைய ரகசியம் அறிந்தவர் என்று பொருள். ஆற்றல் பெற்றாரைச் சித்தி அடைந்தவர் என அழைப்பதுண்டு. மனத்துக்கண் மாசிலனாகி செயற்கரிய செயல்புரிபவர் சித்தர்கள். சித்தி எனும் சொல்லிற்குக் கைகூடல், முயற்சியில் வெற்றி என்பது பொருளாகும்.

ஐம்புலனை அடக்கும் சித்திகளில் சிறந்தவை எட்டு. அதை அட்டமா சித்தி என்பர். இதில் பெயர் பெற்றவர் வல்லநாடு சுவாமிகள். உடலை தனித்தனியே பிரித்து காட்டி அற்புதம் செய்து உள்ளார். வல்லநாடு அருகே பாறைக்காட்டில் பிறந்தவர், மகானாக மாறி அருட்செயலால் மக்களிடையே ஆன்மிகச் சிந்தனையை வெளிப்படுத்துவதும், சித்தர் எனப் பறைசாற்றாது சித்தி பெற்றதை வெளிப்படுத்தியதையும் இந்த நுால் விவரிக்கிறது.

– இளங்கோவன்

நன்றி: தினமலர், 26/12/221.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.