வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப்பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ.

தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும், திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி என, வாதிட்டவர் தேவநேயப்பாவணர்.

மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல் ஆராய்ச்சி வல்லுனரும் ஆவார். இந்நுால், மொழிகள், இயன்மொழி, திரிமொழி என இருவகைப்படும். வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு இயன்மொழியும் இயற்கை மொழி, வளர்ச்சி மொழி என இருவகை நிலைகளை உடையது என்கிறார்.

‘அம்’ என்னும் வேர்ச்சொல் கட்டுரையில், ‘அம்முதல்’ என்ற சொல்லுக்குரிய பொருளுக்கு க, உ என்னும் தமிழ் எண்களும், ‘அமைதல்’ என்ற சொல்லுக்குரிய பொருளுக்கு வளைவுக் குறிகள் எண்களும், ‘அமர்தல்’ என்ற சொல்லுக்குரிய பொருளுக்குக் குறிவில்லாத எண்களும் எனத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

இவை போலவே, அர், இல், இள், உ, உம், உய், உல், உள் போன்றவற்றுக்கும் வேர்ச்சொல்லின் இலக்கணத்தை விளக்கி உள்ளார். வேர்ச்சொற் கட்டுரைகள் என்னும் இந்த நுால், சொல்லாராய்ச்சியில் ஈடுபட நினைக்கும் தமிழ் அறிஞர்கள் கைகளிலும். ஆராய்ச்சி மாணவர்களிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டியது.

– முனைவர் க.சங்கர்

நன்றி: தினமலர், 12/8/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *