விடுதலைப் போரில் பழங்குடி மக்கள்
விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், வி.என்.சாமி, விலை: ரூ.120
பழங்குடி மக்களின் சுதந்திர தாகம்
இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே வெள்ளையரை எதிர்த்து நடைபெற்ற பெரும் விடுதலைப் போராட்டங்களில் பழங்குடி இன மக்களின் பங்கும் கணிசமானது. அவர்கள் உயிர்த் தியாகம் செய்து, தங்கள் நாட்டுப்பற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். ஆனால், அந்தப் போராட்டங்களை வெள்ளையர்கள் ‘கலகம்’ என்றும், ‘வெறும் கிளர்ச்சி’ என்றும் வர்ணித்தனர். அதனால், அவர்களின் வீரச் செயல்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம்பெறாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் நூலாசிரியர். கூர்ந்து கவனிக்கப்படாமல் விடுபட்டுப்போன பழங்குடி மக்களின் போராட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்நூலை உருவாக்கியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் வி.என்சாமி.
– சிவசு
நன்றி: தமிழ் இந்து,7/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818