விமலா கூறும் செவிச்செல்வம்

விமலா கூறும் செவிச்செல்வம், செ. க ணேசலிங்கம், குமரன் பப்ளிஷர்ஸ், விலை 90ரூ.

கற்காலத்திலிருந்து மனித இனம் நாகரிகம் அடைந்தாலும் பெண் என்பவள் அடிமைப்பட்டவளாகவே இருப்பதைக் கதாசிரியர் தன்னுடைய நாவல்களில் குறிப்பிடத் தவறுவது இல்லை. இக்கதையின் நாயகி விமலா இசைக் கல்லூரி மாணவி. எனவே இசையின் தோற்றத்தையும், இருப்பையும், அதன் வணிக நோக்கத்தையும் பாத்திரங்கள் வாயிலாகவே விவரிக்கிறார்.

பெரும்பாலும் உரையாடல் வாயிலாகவே கதை நகர்கிறது. பாலின்பம், இசை இரண்டும் எப்படி வெறும் புலனின்பத்துக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும் மாற்றப்பட்டுவிட்டன என்று கதாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

நன்றி: தி இந்து, 21/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *