வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள்
வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள், வானதி பதிப்பகம், விலை 450ரூ.
முக்காலமும் உணர்ந்தவர்கள் சித்தர்கள், தவவலிமையினால் இறைவனின் இன்னருளைப் பெற்றவர்கள். அட்டமா சித்திகளைக் கைவரப்பெற்று அரிய செயல்களைப் புரிந்தவர்கள். பொதுவாகச் சித்தர்கள் எண்ணிக்கையில் 18பேர் என்பார்கள். அது உண்மையல்ல,
நூறுக்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அதன் அடிப்படையில் மா.ந.திருஞான சம்பந்தன் ஏற்கனவே ‘சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்’ என்ற நூலில் 81 சித்தர்களைப் பற்றி எழுதியுள்ளார். இந்த நூலில் பூண்டி மகான், மல்லையா சித்தர், கொடுவிலார் பட்டி சித்தர், பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள், ஸ்ரீரெட்டியப்பட்டி சுவாமிகள் உள்பட 54 சித்தர்களைப் பற்றியும் அவர்களது வாழ்வில் நிகழ்ந்த வியப்பில் ஆழ்த்தும் சம்பவங்கள் குறித்தும் அவர் விரிவாக எழுதியுள்ளார்.
54 சித்தர்களில் ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்கிறார், 53 சித்தர்களின் சமாதிக்கு நேரில் சென்றும் அவர்களின் சீடர்களை நேர்காணல் செய்தும் இந்த அரிய நூலை ஆக்கியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 5/10/2016.