சிறகை விரி பற!

சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130.

ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு உலகின் சகல விஷயங்களையும் பார்க்கும் நூலாசிரியரின் 31 கட்டுரைகள் அடங்கிய நூல் இது. நமது பாரம்பரிய சிந்தனைகள், முன்னோரின் வாழ்க்கைமுறைகளை இன்றைய வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து தெளிவான புரிதல்களை இந்நூல் வழங்கியுள்ளது.

அநீதியான எதையும் எதிர்க்கும் பண்பு நூல் முழுவதும் இழையோடி இருக்கிறது. பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய பல விஷயங்கள் ஓரிரு வரிகளிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ” கண், கழுத்து, மனசு எல்லாம் கொஞ்சம் காலியாக இருந்தால் பிரபஞ்சம் முழுக்க நமக்கு குரு கிடைத்துக் கொண்டே இருப்பார் என்கிறார் நூலாசிரியர்.

பல்வேறு மதநம்பிக்கைகளைப் பற்றிச் சொல்லும்போது, “எந்த வீட்டில் இருந்தாலும் தாய் ஒன்றுதான். எந்தக் கோயிலுக்குப் போனாலும் கடவுள் ஒன்றுதான்' என்கிறார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்நூல் ஆன்மிகப் பாதையில் அன்றாட வாழ்க்கையை நடத்த விரும்புபவர்களுக்கு நிச்சயம் வழிகாட்டும்.

நன்றி: தமிழ் இந்து

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *